Posts

Showing posts from February, 2020

GK

பாட்மிட்டன் பந்தில் எத்தனை இறகுகள் உள்ளன? 16 விளக்கம்: பாட்மிட்டன் பந்தில் 16 இறகுகள் உள்ளன.

Book பாரதியார் கவிதைகள்

தினம் ஒரு புத்தகம் ______________________________ பாரதியார் கவிதைகள் ______________________________       தமிழில் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர் பாரதியார்.தம் எழுத்துகளின் வாயிலாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.       இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.இவரின் சம காலத்தைய மனிதர்கள் காந்தி, திலகர், உ.வே.சா, .வ.ஊ.சி,. அரவிந்தர் ஆகியோர்.        தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, ஒருமைப்பாடு குறித்த கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.        இவருடைய கவித்திறனை மெச்சி எட்டயபுரம் சமஸ்தானம், "பாரதி "என்ற பட்டம் வழங்கியது.          பாரதி... பைந்தமிழ் தேர் பாகன்.. சிந்துக்குத் தந்தை.. குவிக்கும் கவிதைக் குயில்.. நாட்டில் கவிழ்க்கும் பகையை, கவிழ்க்கும் கவிமுரசு.. நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா. காடு மணம் கமழும் கற்பூர சொற்கோ.. மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று.. கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல் ..   என்று பாவேந்தர், பார...

Book பாற்கடல்

தினம் ஒரு புத்தகம் ________________________________ பாற்கடல் (வைரமுத்து) _________________________________         குமுதம் இதழில் வெளிவந்த கவிப்பேரரசின் அற்புதமான கேள்வி - பதில்களின் தொகுப்பு இந்நூல்.         வாழ்வியல், அரசியல், கலை, இலக்கியம், அறிவியல் என்ற பல பரிணாமங்களோடு இயங்குகிறது இந்தப் " பாற்கடல் " ..         பகுத்தறிவும், முற்போக்கும், மண் நேசமும், மனிதப் பிரியமுமே இந்த பதில்களின் அடிநாதம். கேள்வி - பதில்களில் ஒரு சில... 1.கேள்வி : காலையில் எழுந்ததும் கண்முன் படும் வாசகம் சொல்லுங்கள்?   பதில் : "நின்ற இடத்தில் நிற்க   வேண்டுமா? ஓடிக் கொண்டே இரு." 2.கேள்வி :சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்?     பதில் : சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும். 1.சோறு, 2.அரிசி. 3.விதை நெல். சோறு : இன்றையத் தேவை. அரிசி  : நாளையத் தேவை. விதை நெல் :எதிர்காலத் தேவை.. 3.கேள்வி :யாரிடம் பேசினால் அனுபவம் கிடைக்கும்?     பதில் : ஓய்வு பெற்ற நீதிபதிகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள், அரை வயதில்...

Giving to others

Image

GK

உலகக் கோப்பை கால் பந்து போட்டிகளில் மிக விரைவாக கோல் போடுபவருக்கு என்ன விருது வழங்கப்படுகிறது? கோல்டன் வாட்ச்  விளக்கம்: உலகக் கோப்பை கால் பந்து போட்டிகளில் மிக விரைவாக கோல் போடுபவருக்கு "கோல்டன் வாட்ச்" என்ற விருது வழங்கப்படுகிறது.

Time

Image

Ego

Image

Victory

Image

GK

"நந்தி சிங்" எந்த விளையாட்டுடன் தொடர்பு கொண்டவர்? ஹாக்கி  விளக்கம்: "நந்தி சிங்" ஹாக்கி விளையாட்டுடன் தொடர்பு கொண்டவர் ஆவார்.

GK

மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் விளையாட்டின் பெயர் என்ன? பெராலிம்பிக் கேம்ஸ் (Paralympic games) விளக்கம்: மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் விளையாட்டின் பெயர் "பெராலிம்பிக் கேம்ஸ்" எனப்படும்.

Book ருத்ர நேத்ரா

தினம் ஒரு புத்தகம் _____________________________ ருத்ர நேத்ரா (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில்...கௌரி கிருபாகரன்  ______________________________        "ருத்ர நேத்ரா " என்ற தெலுங்கு புதினத்தை அதே பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார் கௌரி கிருபாகரன் அவர்கள்.         இந்நூலை படிக்கும் போது சில பக்கங்கள் மர்ம நாவலைப் படிப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.          கதாநாயகனை விரும்பும் மூன்று பெண்களையும் விரசம் இல்லாமல், வேறுபடுத்தியுள்ள பாங்கு அருமை.குழந்தைத்தனம் மிகுந்த வெகுளியாக ஒரு பெண்ணையும், ஏக்கமும், தனிமையும் நிறைந்த ஒரு பெண்ணையும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் உள்ள ஒரு பெண்ணையும் சித்தரித்தது நயம் மிக்கது.         பார்வையற்ற வளர்ப்புத் தங்கை, தன் அண்ணணின் நாட்டுப்பற்றுக்குத் தான் சிறிதும் குறைந்தவள் அல்ல என்பதை தன் செயலால் மெய் சிலிர்க்க வைக்கிறாள்.         பெண்மையை வேறுபடுத்தி எழுதிய விதம், நாட்டுப்பற்று, அஞ்சா நெஞ்சம்,தியாகம், இரக்கம் போன்ற நல்ல பண்புகளையும், சுயநலம், ஆணவம், அ...

GK

'வேதிப் பொருள்களின் அரசன்' என்று அழைக்கப்படுவது? கந்தக அமிலம்  விளக்கம்: இது வேதிப்பொருட்களின் அரசன் என்றழைக்கப் படுகிறது. ஏனனெனில் இது ஒரு முக்கிய வேதிப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.விவசாயிகளால் பயன்படுத்தப்படும் பல வகையான உரங்கள் கந்தக அமிலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. நீர்த்த கந்தக அமிலம் கார் பாட்டரிகளிலும் பயன்படுகிறது.

Book விண்ணும் மண்ணும்

தினம் ஒரு புத்தகம் _____________________________ விண்ணும் மண்ணும் (மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு) ______________________________        விண்வெளி விஞ்ஞானத்தின் தகவல் பொக்கிஷம் என்று கொண்டாடப்பட வேண்டிய வகையில் அமைந்த நூல் இது.        விண்வெளி விஞ்ஞானத்தின் சிக்கலான கருத்துகளை எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு.        இந்திய மண்ணில் மண் சார்ந்தும், விண்ணோக்கியும் நடத்தப்படும் முக்கிய ஆய்வுகளையும், அவை தொடர்பான அறிவியல் சிந்தனைகளையும் இந்நூலில் காண முடியும்.        இந்தக் கருத்துகள் தொடர்பாக பல்வேறு இதழ்களில் எழுதப்பட்டிருந்த 13 கட்டுரைகளின் தொகுப்பும், ஆசிரியர் இருவர் அளித்த நேர்காணல்களின் தொகுப்பும் இன்றைய இளைஞர் சமுதாயத்தினர் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும்.                (விலை : ரூ 150)                (முரண்களரி பதிப்பகம்)

Book விட்டு விடுதலையாகி

தினம் ஒரு புத்தகம் _______________________________ விட்டு விடுதலையாகி (வாஸந்தி) ________________________________        ஒரே நேரத்தில் சமூக நாவலாகவும், சரித்திர நாவலாகவும் மலர்ந்துள்ளது இப்படைப்பு.         ஒருபுறம் சுதந்திரப் போராட்ட கால உக்கிரம், மறுபுறம் அதே காலக்கட்டத்தில் நிலவிய தேவதாசி முறையின் சித்தரிப்பு.இவை இரண்டும் கலந்த காலத்தின் நிகழ்வுகள்.        ஆனால் இவற்றை நிகழ்காலத்தோடு பிணைத்துச் சொல்கிறாள் கொடைக்கானலைச் சேர்ந்த ஓர் இளம்பெண்.        கலைக்கான அர்ப்பணிப்பாக தேவதாசி முறையை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கஸ்தூரி.. அம்முறையை மாற்றத் துடிக்கும் லட்சுமி .. இப்படி எதிரும் புதிருமான பாத்திரப் படைப்புடன் புதினம் நகர்கிறது.       பாத்திரப்படைப்பில் ஆசிரியரின் கைவண்ணம் மிளிருகிறது.                   (விலை : ரூ 200)                   (கவிதா பதிப்பகம்)

GK

தாமிரம், துத்தநாகம், நிக்கல் ஆகியவற்றின் கலவை என்ன? ஜெர்மன் சில்வர்  விளக்கம்: தாமிரம், துத்தநாகம், நிக்கல் ஆகியவற்றின் கலவையே ஜெர்மன் சில்வர் ஆகும். இது அவ்வளவு எளிதில் துருப்பிடிக்காது. எளிதில் உடையவும் உடையாது.

GK

ஒளியின் செறிவை எந்த உபகரணத்தைக் கொண்டு அளவிடுகிறோம்? போட்டோ மீட்டர்

Book மனிதன் மாறிவிட்டான்

தினம் ஒரு புத்தகம் _____________________________ மனிதன் மாறிவிட்டான் (வெ.இறையன்பு) ______________________________       இந்தப் பிரபஞ்சத்தைப் போலவே மனிதனின் உடலுக்குள்ளும் பல ரகசியங்கள் புதைந்துள்ளது.      உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விசயத்தை நமக்கு உணர்த்தியபடியே தான் இருக்கிறது.      அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பது தான் இந்த "மனிதன் மாறிவிட்டான் " என்ற இப்புத்தகம்.       உடல் உறுப்புகள் என்ன காரணத்திற்காக படைக்கப்பட்டதோ, அந்தக் காரணத்திற்காக பயன்படுத்தி இருக்கிறோமா என்று இப்புத்தகம் யோசிக்க வைக்கிறது.        மனதுக்கும் உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பை இதைவிட எளிமையாகச் சொல்வது கடினம். ஒவ்வொருவரும் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம் இந்நூல்.                  (விலை : ரூ 140)                  (விஜயா பதிப்பகம்)

Individuality

Image

GK

தேனில் உள்ள சுத்தத் தன்மையை எதன் மூலம் அறியலாம்? ஹைட்ரோ மீட்டர் விளக்கம்: ஹைட்ரோ மீட்டர் என்பது திரவங்களின் அடர்த்தியை அளக்கப் பயன்படும் கருவியாகும். இதனைக் கொண்டு தேனின் சுத்தத் தன்மையைக் கூட அறியலாம்.

Book நாவலெனும் சிம்பொனி

தினம் ஒரு புத்தகம் _________________________________ நாவலெனும் சிம்பொனி (எஸ்.ராமகிருஷ்ணன்) _________________________________         தமிழில்  உருவான முதல் நாவலில் தொடங்கி சமீபத்தில் வெளியானது வரை தன் வாசிப்பு வரம்பிற்குள் வந்த பல்வேறு நாவல்கள் குறித்தும், அதன் வடிவ கோட்பாடு, கதாப்பாத்திரங்களின் உருவாக்கங்கள் என பல்நோக்குத் தன்மையுடன் அணுகுகின்ற கட்டுரைகள் இடம் பெற்ற நூல் இது.         பிரதாப முதலியாரில் இருந்து அரவிந்தன், விநாயக முருகன், தமிழ்நதி, எம்.ஸ்ரீராம் என்று பலரது படைப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.         அதன் கூடவே, எஸ்.ரா தாம் வாசித்த பல தென் அமெரிக்க மேற்கத்திய புதினங்களை, கதைப் பாங்கில் அறிமுகம் செய்கிறார்.                  (விலை : ரூ 140)                  (தேசாந்திரி பதிப்பகம்)

Self confidence

Image

Good habits

Image

Teacher

Image

Book பொன் விலங்கு

தினம் ஒரு புத்தகம் ________________________________ பொன் விலங்கு (நா.பார்த்தசாரதி) ________________________________     இப்புதினத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், பொன்மொழிகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கும் அருமையும், கவிதைகளும் அவற்றின் நயங்கள் விளக்கப்பட்டிருக்கும் சிறப்பும் அழகானவை.கற்போர் மனதைக் கவரக்கூடியவை.         பல்வேறு கதாப்பாத்திரங்கள் மூலம், இன்றைய சமூகத்தின் நிலையை உள்ளது உள்ளபடியே எடுத்துக் காட்டியிருக்கும் விதம் சிறப்புடையது.        இப்புதினம் மூலம் ஆசிரியர் தம் லட்சிய கனவுகளுக்கு பெருவாழ்வளித்து, சமூகசேவை ஆற்றியுள்ளார்.                  (விலை : ரூ 250)                  (சீதை பதிப்பகம்)

GK

வானத்தில் பலூனை பறக்க விடப் பயன்படும் வாயு எது? ஹைட்ரஜென்  விளக்கம்: நீரியம் அல்லது ஹைட்ரஜென், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றிலும் எடை குறைவானதும், கூடிய அளவு கிடைக்கக்கூடியதும் ஆகும். இது எடை குறைவானது என்பதால் தான் வானத்தில் பலூனை பறக்க விடப் பயன்படுத்துகிறோம்.

Book சூர்ய வம்சம்

தினம் ஒரு புத்தகம் ______________________________ சூரிய வம்சம் (சிவசங்கரி) ______________________________        சிவசங்கரி தன் வாழ்க்கை அனுபவங்களைச் சுவைபட கூறியுள்ளார் இந்நூலில்.        அன்னை தெரசா, அப்துல் கலாம், ராஜீவ் காந்தி, ஜெயலலிதா பல பிரபலங்களுடன் அவர் கொண்டிருந்த நட்பு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் தகவல்கள், அவருடைய வாழ்க்கையின் உயர்வைப் காட்டுகின்றன.         முதன் முறையாக வங்கிப் பணியில் சேர்ந்த அனுபவம், முதல் கதை பத்திரிகையில் வெளிவந்த போது ஏற்பட்ட பரவசம், "அக்னி " என்ற அமைப்பைத் தொடங்கி ஆற்றிய பணிகள் ஆகிய பல்வேறு செய்திகள் ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளன.              (விலை : முதல் பகுதி ரூ 325,                     இரண்டாம் பகுதி ரூ 375)              (வானதி பதிப்பகம்)

GK

உலகின் முதல் குடியரசு நாடு எது? ஸ்பார்ட்டா  விளக்கம்: உலகின் முதல் குடியரசு நாடு "ஸ்பார்ட்டா" தான். இது கிரீஸ் நாட்டில் உள்ளது.

Book மருந்தென வேண்டாவாம்

தினம் ஒரு புத்தகம் ________________________________ மருந்தென வேண்டாவாம் (மருத்துவர்.கு.சிவராமன்) ________________________________        நவீன உணவு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பெருகி வருகிறது.ஃபாஸ்ட் புட், சாக்ரீம், கலர், பதப்படுத்தப் பட்ட உணவுகளை உண்டு வந்த மக்கள் அதன் பின் விளைவுகளை உணர்ந்து பாரம்பரிய உணவு வகைககளைத் தேடியும், காய்கறி, கீரை உணவு வகைகளை நாடியும் வருகின்றனர்.       அறுசுவை உணவின் முக்கியதுவத்தை விரிவாக விளக்குகிறது இந்நூல். காய்கறிகள், பழங்கள் இவற்றின் சத்துகளைக் கூறுவதோடு சிறு தானியங்களின் மகத்துவத்தையும், அவற்றின் சில வகை, செய்முறைகளையும் விளக்குகிறது.       பின்விளைவுகள் அற்ற நலமுள்ள உணவு வகைககளை தேர்வு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொறுப்பு பெற்றோர்களைச் சார்ந்தது என்றும் எடுத்துரைக்கிறது.         இந்நூலை வாசிக்கும் இளைய தலைமுறையின் உணவு முறைகள், இனி சிறப்பாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.                    (விகடன் பிரசுரம்)     ...

Attention

Image

GK

கப்பல் செல்லும் திசையை அறியப் பயன்படும் கருவி எது? மரைனர்ஸ் காம்பஸ்  விளக்கம்: மரைனர்ஸ் காம்பஸ் இதனை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் சீனர்கள் தான்.

Book தண்ணீர் தண்ணீர்

தினம் ஒரு புத்தகம் ______________________________ தண்ணீர் தண்ணீர் (கோமல் சுவாமிநாதன்) _______________________________       ஒரு குடம் தண்ணீருக்காகப் பத்து மைல் தூரம் மக்கள் ஆலாய்ப் பறந்த கதையைச் சொல்கிறது இந்நூல்.        80 களின் தொடக்கத்தில் தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் தலைவிரித்தாடின.        பல கிராமங்கள் வறண்டு காணப்பட்டன.இப்பிரச்சனையின் வீரியத்தையும், அதன் வேர்களையும் தன் படைப்பில் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர்.                    (வானதி பதிப்பகம்)

Book

தினம் ஒரு புத்தகம் _____________________________ உனக்குள் ஒரு தலைவன் (S.சைலேந்திர பாபு I A S) ______________________________        ஒரு விதைக்குள் ஓர் ஆலமரம் மறைந்திருப்பதைப் போல, நம்முள் ஒளிந்து கிடக்கும் திறமைகளை, ஆளுமைப் பண்புகளை, தலைமை ஆற்றல்களை உணரவும், வெளிக் கொணரவும் தூண்டுகின்ற செய்திகள் அடங்கிய அற்புதமான நூல் இது.       இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி, வெற்றி பெற விரும்பும் எவருக்கும் மிகச் சிறந்த கையேடு இந்நூல்.. புத்தகங்கள் வாசிப்போம்.. புத்தாக்கம் பெறுவோம்...                    (விலை : ரூ 80)                    (விஜயா பதிப்பகம்)

Life

Image

Yesterday, today

Image

Book

தினம் ஒரு புத்தகம் ______________________________ ரோமாபுரி ராணிகள் (அறிஞர் அண்ணா) _______________________________        இந்நூலில் சுமார் 15 கட்டுரைகள் உள்ளன.இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் ரோம் சாம்ராஜியத்தின் வெற்றிக்கொடி ஒரு காலத்தில் கம்பீரமாக பறந்து கொண்டிருந்தது.        ரோம் நாட்டு வீரர்களின் குதிரைப்படையின் குளம்புகளின்கீழ் சிக்கிச் சிதைந்தவர்கள் எண்ணற்றவர்கள்.        வீரத்தின் விளைநிலமான ரோமாபுரியில், ரோமாபுரி ராணிகள் பலர் (பாம்பேயா, லிவியா, புல்வியா, பாஸ்டினா, ஜீலியா...) போன்ற பலர் ஆடம்பர வாழ்விலும், சிற்றின்பத்திலும் ஈடுபட்டு அப்பதவிக்கு ஊறுவிளைவித்தனர்.நல்ல குணம் கொண்ட ராணிகளும் இருந்தனர்.       இவர்களின் குணாதிசயங்களை அண்ணா அவர்கள் தமக்கே உரித்தான அழகிய நடையில் சொல்லியிருக்கிறார்.அண்ணாவின் எழுத்துகள் கற்போர் நெஞ்சை கவரக்கூடியவை.இந்நூலும் இதற்கு விதிவிலக்கல்ல.ரோம் வரலாற்றை அறிந்து கொள்ள வைக்கும் அற்புதமான நூல்..                   (வ...

எண்ணம்

Image

GK

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது? நியூயார்க் விளக்கம்: ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடம் நியூயார்க் நகரில் தான் அமைந்து உள்ளது.

GK

நவீன இத்தாலியின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்? கரிபால்டி விளக்கம்: கரிபால்டி (Giuseppe Garibaldi, ஜூலை 4, 1807 - ஜூன் 2, 1882) நவீன இத்தாலியின் தந்தை. ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கியவர். இத்தாலியில் இவர் உருவாக்கிய தொண்டர் படை புகழ் பெற்றது.

Book

தினம் ஒரு புத்தகம் ________________________________ அவளுக்கென்று ஒரு இடம் (லட்சுமி) _________________________________        ஜெய்குமார் தன் துணையை தேர்தெடுப்பதில் தவறு செய்கிறான்.தன் மனைவி குணம் சரியில்லாதவள் என்பதை அறியாது விபத்தில் இறந்து விட்டதாக நினைத்து கவலை அடைகிறான்.        அவள் இறக்கவில்லை, இருக்கிறாள் என்ற உண்மையையும், அவள் வாழ்வின் அவலத்தையும் அறிந்த தாத்தா சிவபாதம் அனுராதாவை பேரனுக்கு மறுதாரமாக மணமுடித்து வைக்கிறார்.        உண்மை நிலை அறிந்து வாணியை ஜெய்குமாருடன் வாழ வைக்க நினைக்கிறாள் அனுராதா.         ஆனால், மனம் திருந்திய வாணியும், மற்றவர்களும் தங்கள் வாழ்க்கையில் அவளுக்கென்று தாங்கள் அளித்த இடத்திலிருந்து அவளை விடுவிக்க மனமின்றி தவிக்கின்றனர்.         வாணி நோய் காரணமாக இறக்கிறாள்.அனு புதிதாகத் தனது வாழ்வைத் தொடங்குகிறாள்.                 (விலை : ரூ 140)                 (பூங்கொடி பதிப்பகம்)

Instant achievement

Image

3 R's

Image

Book

தினம் ஒரு புத்தகம் ______________________________ அலாரத்தை எழுப்புங்கள் (நா.சங்கரராமன்)  _______________________________        "படுக்கையோடு சேர்ந்தே உதறி விடுங்கள் உங்கள் சோம்பலை "  சோம்பலுக்கு வழிவிடாதீர்கள் என்று சொல்லும் நூல் இது.         ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய ஆச்சரியங்களும், அனுபவங்களும் காத்திருக்கும் போது அதை நம்பிக்கையோடு எதிர் கொள்ள மகிழ்ச்சியாக எழுவது அவசியம்.         நல்ல எண்ணங்களுக்கு வலிமை உண்டு என்பதை நாம் எழுவதன் மூலம் உணர்த்த முடியும்.          அதிகாலை எண்ணங்களே வாழ்க்கையை மிகச்சிறப்பாக வழிநடத்திச் செல்லும் என்பதை மறக்க முடியாது.          செயல்களாலும், சிந்தனைகளாலும் ஒவ்வொரு நாளையும் சாதனை நாளாக மாற்றும் பொறுப்பும் சக்தியும் நம்மிடையே தான் உள்ளது என்பதை நம்புங்கள். நம்பிக்கையோடு எழுங்கள் இனி.. அலாரங்கள் நம்மை எழுப்ப வேண்டாம்.. அதிகாலை அலாரத்தை நாம் எழுப்புவோம்..              (விலை : ரூ 170)       ...

Achievers

Image

Silence

Image

GK

நெதர்லாந்தின் அரசாங்க புத்தகத்தின் பெயர் என்ன? ஆரஞ்சு புத்தகம்  விளக்கம்: நெதர்லாந்தின் அரசாங்க புத்தகத்தின் பெயர் "ஆரஞ்சு புத்தகம்" எனப்படும்.

Book

தினம் ஒரு புத்தகம் _______________________________ கடலுக்கு அப்பால் (ப.சிங்காரம்) _______________________________        தமிழகத்தில் வாழ வழியற்று, தென் கிழக்காசிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப் போட்ட உலகப் போரின் பின்புலத்தில் ப.சிங்காரம் அவர்கள் சொல்லியுள்ள கதையான "கடலுக்கு அப்பால் " புதினம் பல புதிய தேசங்களை அறிமுகப்படுத்துகிறது.        மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்லுவதற்கு எதுவுமே இல்லை.மனதில் நம்பிக்கை இழக்காத வரையில் நாம் எதையுமே இழப்பதில்லை என்ற தேறுதலுடன் முடியும் புதினத்தின் நிறைவு வரிகள் தான், ஆசிரியர் சொல்ல விழைவதாக இருக்கலாம்.                  (விலை : ரூ 160)                  ( டிஸ்கவரி புக் பேலஸ்)          

GK

சீனாவின் அரசாங்க புத்தகத்தின் பெயர் என்ன? வெள்ளைப் புத்தகம்  விளக்கம்: சீனாவின் அரசாங்க புத்தகத்தின் பெயர் "வெள்ளைப் புத்தகம்" எனப்படும்.

Book

தினம் ஒரு புத்தகம் ______________________________ உதயமாகிறது வலிமை படைத்த பாரதம் (அப்துல் கலாம் அவர்கள்) ______________________________       நமது தேசத்தின்அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரிடம் கலாம் அவர்கள் நடத்திய கலந்துரையாடல்களும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளைச் சேர்ந்த மாணவ சமுதாயத்தினரிடம் நிகழ்த்திய உரைகளும் தான் இந்தப் புத்தகம்.         இந்நூல் இளைய சமுதாயத்தினரையும், இந்திய மாணவ சமுதாயத்தினரையும் வழிநடத்தும் மகத்தான நூல் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. வாசியுங்கள்.. வாழ்வை பயனுள்ளதாக்குங்கள்..                (விலை : ரூ 150)                 (கண்ணதாசன் பதிப்பகம்)

GK

வங்காள தேசத்தில் கங்கை நதி என்ன பெயரில் அழைக்கப்படுகிறது? பத்மா விளக்கம்: பத்மா ஆறு என்று அழைக்கப்படும் கங்கை நதி வங்காள தேசத்தின் முக்கிய ஆறு ஆகும். இது வங்காள தேசத்தை சுமார் 120 கிலோமீட்டர் நீளம் ஆக்கிரமித்து செல்கிறது. ராஜ்ஷாஹி என்ற புகழ் பெற்ற வங்காள நகரம் இந்த பத்மா நதிக்கரையில் தான் அமைந்துள்ளது.

Child abuse

Image

Book

தினம் ஒரு புத்தகம் _____________________________ பெண் ஏன் அடிமையானாள் (தந்தை பெரியார்) ______________________________       உலக ஜனத்தொகையில் ஒரு பாதியாய், மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகிற்கு       சமுதாயத்தில் கைம்மை, சொத்துரிமையின்மை, கல்வி மறுத்தல் முதலிய கட்டுப்பாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார் பெரியார்.        மூடநம்பிக்கையால் அல்லல்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும், வருங்கால மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும் தடையாய் இருக்கும் இந்தத் தடைகளை உடைத்தெறிந்து,        பெண்கள் சொத்துரிமை பெறுதல், அரசுப்பணி, படிப்பறிவு பெறுதல் முதலியவற்றைப் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்று பெண் விடுதலை பேசும் நூல் இது.             (விலை :ரூ 40)              (பெரியார் சுயமரியாதை         பிரச்சார வெளியீடு)

GK

"ஏழு குன்றுகளின் நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? ரோம்  விளக்கம்: "ஏழு குன்றுகளின் நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் "ரோம்" தான்.

Book

தினம் ஒரு புத்தகம் ______________________________ தமிழ் வளர்த்த சான்றோர் (பட்டத்தி மைந்தன்) _______________________________      பைந்தமிழ் வளத்தை வாரி விதைத்தவர்கள் நம் பழந்தமிழ் பண்பாளர்கள்.       மீனாட்சி சுந்தரம்பிள்ளை தொடங்கி வீரமாமுனிவர் வரை 22 தமிழறிஞர்களைப் பற்றிய வரலாறுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.        தமிழுக்குத் தொண்டு செய்தவர்களைத் தவப்புதல்வர்கள் ஆக்கிக் காட்டும் வகையில் இப்பெருமக்களின் வரலாறுகள் அமைந்துள்ளன.        தமிழறிஞர்களை நினைவு கூறும் வகையில் அமைந்த அற்புதமான நூல் இது.                  (விலை : ரூ 70)                  (சாரதா பதிப்பகம்.)

GK

"கீழ்நாட்டு ஏதென்ஸ்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? நாகர்கோயில் விளக்கம்: "கீழ்நாட்டு ஏதென்ஸ்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் "நாகர்கோயில்" தான்.

Patience

Image

மூதுரை

தினம் ஒரு புத்தகம் ____________________________ நட்பெனும் நந்தவனம் (வெ.இறையன்பு) ____________________________          உயர்வு - தாழ்வு எல்லா நிலையிலும், ஆலமரமாக ஆழமாக வேர் விட்டு வளரும் உறவு நட்பு மட்டுமே.        70 தலைப்புகளில் எழுதப்பட்ட இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் புகழ்பெற்ற அறிஞர்களின், நட்பு பற்றிய பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன.       நட்பின் பல பரிமாணங்கள் இந்நூலில் மொத்தமாக தொகுத்து வெளியிடப்பட்டிருக்கிறது.இந்நூலை வாசிப்பவர் ஒவ்வொருவரும் அதன்பால் ஈர்க்கப்பட்டு நூலின் 446 பக்கத்தையும் முழுழூச்சாக வாசித்துவிட வேண்டும் என்னும் ஆர்வம் கொள்வர்.                (விலை : ரூ 375)                (கற்பகம் புத்தகாலயம்)

GK

"துறவி நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? கொரியா  விளக்கம்: "துறவி நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் "கொரியா" தான்.

Moodle Basic course completion badge

Image

Moodle Basic course

Image

மூதுரை

மூதுரை ________________ மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்  உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணீரு மாகா அதனருகே சிற்றூறல் உண்ணீரு மாகி விடும். பொருள் __________________     தாழம்பூ இதழ்களினாலே பெரியதாக இருக்கிறது.மகிழம் பூ இதழ்கள் சிறியதாயினும் மணத்தினாலே இனிதாயிருக்கிறது. கடல் பெரியதாயிருக்கிறது. ஆயினும் அதிலுள்ள நீர், குடிக்கப் பயன்படாது.கடலின் அருகில் இருக்கும் சிறிய மணற்குழியில் இருக்கும் ஊற்றுநீர் குடிக்க உகந்த நீராகும்.அதனால் உருவத்தால் சிறியவர் என்று மதிக்காமல் இருக்க வேண்டா.

மூதுரை

மூதுரை _______________ அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுளித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்  கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. பொருள் _________________    நீர் வற்றிய குளத்திலிருந்து நீங்குகின்ற நீர்வாழ்ப் பறவைகள் போல வறுமை வந்தபொழுது நீங்குவார் உறவினராகார். அந்தக் குளத்தில் உள்ள கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் போல, வறுமை வந்தபோதும் நம்மைவிட்டு நீங்காது உடனிருப்பவரே உறவினராவர்.

மூதுரை

மூதுரை _________________ கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத்- தானும்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி. பொருள் ____________________       கற்க வேண்டியவற்றை முறைப்படி கல்லாதவன் ஒரு கவியைக் கற்றுக் கொண்டு சொல்லுதல் காட்டில் உள்ள மயில், தன் அழகிய தோகையை விரித்து ஆட, அதைப் பார்த்துக் கொண்டிருந்த வான்கோழியானது தன்னையும் மயிலாகவே நினைத்துக் கொண்டு  தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடுதலைப் போன்றது.

மூதுரை

மூதுரை ______________________ வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி ஆங்கதனுக் ஆகார மானாற் போல்-பாங்கறியாப்  புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின்மே லிட்ட கலம். பொருள் ________________________        வரிகளை உடைய வேங்கைப் புலியின் விடநோயை போக்கிய விட வைத்தியன், அப்பொழுதே அப்புலிக்கு இரையானாற் போல, நன்றியில்லாத அற்ப அறிவினருக்கு செய்யப்பட்ட உதவி கல்லின் மேல் போடப்பட்ட மட்கலம் போல, செய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும் என்பதாகும்.

மூதுரை

மூதுரை ___________________ அடக்க முடையர் அறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்  ஓடுமீ னோட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு.     பொருள் ____________________      கொக்கானது, நீர் மடையினிடத்து ஓடுகின்ற சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருக்க, பெரிய மீன் வரும் வரையும் அடங்கி இருக்கும். அதுபோல அடக்கத்துடன் இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி அவரை வெல்ல நினைக்க வேண்டியதில்லை..

மூதுரை

மூதுரை ________________ ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி - தோழி நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம் விதியின் பயனே பயன். பொருள் __________________ ஆழமான கடலின் நீரை அழுத்தும் படியாக அமிழ்த்தி அள்ளினாலும், ஒரு படி நீரானது நால் படி நீராகாது. அதுபோல தோழியே!  பெண்களுக்கு மிக்க பொருளும் தக்க நாயகனும் கிடைத்தாலும் அவரவருடைய விதியின் பயனையே அடைவர்.

Book

தினம் ஒரு புத்தகம் _____________________________ தினம் ஒரு சிந்தனை (ப.செல்லப்பா) _____________________________        பல்வேறு தலைப்புகளில், சிந்தனையைத் தூண்டும் கருத்துகளின் துணுக்குத் தோரணமாக இந்த நூல் விளங்குகிறது.         இதில் இடம் பெற்றுள்ள 365 கருத்துகளில் ஆன்மிகச் செய்திகள், வாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள், பிரபலங்களின் மேற்கோள்கள், உண்ணும் உணவின் சிறப்பு போன்ற ஏராளமான பயனுள்ள தகவல்கள் தரப்பட்டுள்ளன.                 (விலை : ரூ 200)                 (ஜீவா பதிப்பகம்)

மூதுரை

மூதுரை  _______________ கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்து பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே- விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம். பொருள் ________________       கயவர் கடுங்கோபத்தால் வேறுபட்டால், கல்லின் பிளவு போல திரும்ப சேரமாட்டார்.சிறப்புமிக்க சான்றோர்களின் கோபமானது வில்லைப் பிடித்து (அம்பினால்) நீர் பிளக்க எய்த பிளவுபோல (அப்போதே) நீங்கும்.

Wish

Image

GK

"இந்தியாவில் பொற்கோயில் நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? அமிர்தசரஸ்   விளக்கம்: "இந்தியாவில் பொற்கோயில் நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் "அமிர்தசரஸ்" தான்.

Badge

Image

e waste

Image

Fuel conservation

Image

Book

தினம் ஒரு புத்தகம் _______________________________ 13 - 14 - 15 (எண்டமூரி வீரேந்திரநாத்) தமிழில்...கௌரி பிரபாகரன்)  ________________________________        பிரபல தெலுங்கு வாரப் பத்திரிகையில் தொடர் கதையாக வெளிவந்து, பிறகு நாவலாக வெளிவந்த நூல் இது.        கதாநாயகன் பிரஹஸித் டென்னீஸ் விளையாட்டு வீரன்.அவனால் நேசிக்கப்பட்ட பெண் லட்சுமி ..திருமணமானவள்.. வாழ்க்கையில்  வெறுமை..பொங்கி வரும் எழுத்தார்வம் அவளைப் படைப்பாளியாக்குகிறது.         ஆண்டாண்டு காலமாய்ப் பழக்க ரீதியில் பின்பற்றி வந்த நெறிமுறைகள், கோட்பாடுகள் ஒதுக்கித் தள்ளப்படுவதை இப்புதினத்தில் காணலாம்.       பத்திரிகை துறையில் ஈடுபாடு கொண்ட மதுரா, மநோவசியத்தின் பெயரில் மக்களை ஏமாற்றும் ராஜீ, தண்டனைக்குச் சிக்காமல் திறமையாகக் குற்றங்களைச் செய்து வரும் டாக்டர் விசால், அநியாயத்தை எதிர்த்துப் போராடி கால்களை இழந்த லாயர் சிவசங்கரன் இவர்கள் முற்றிலும் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல.       குடும்ப வாழ்க்கையில் வெறுமை குடிபுகுந்தால், அதைப் போக்கிக் கொள்...

Goodness

Image

Life

Image

Guidelines- life

Image

Self control

Image

GK

"வெள்ளை நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? பெல்கிரேட்  விளக்கம்: "வெள்ளை நகரம்" என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றது "பெல்கிரேட் நகரம்" தான். இந்த நகரம் யுகோஸ்லேவியாவில் உள்ளது.

Book

தினம் ஒரு புத்தகம் ____________________________ அகம் புறம் (வண்ணதாசன்) _____________________________         இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கும் அழகியல் முக்கியம் என நாம் உணர்ந்து கொண்ட போதும், ஊர்ந்து கொண்டு செல்லும் வாழ்க்கையில் நிகழ்வுகளுக்கு இடையில் ஒளிந்திருக்கும் அழகியலை தன் எழுத்து மூலம் தீட்டியுள்ளார்.         தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களின் முகங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.         வசீகரமான தமிழ்நடையில் சந்தித்த மனிதர்கள், சந்திக்க எண்ணிய மனிதர்கள் பற்றி மண் வாசத்தோடு எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள், வாசிப்பவரைக் கவர்ந்திழுக்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை.                 (விலை : ரூ150)                 (சந்தியா பதிப்பகம்)

Status

Image

GK

"அமைதி நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? ஜெருசலேம்  விளக்கம்: "அமைதி நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் "ஜெருசலேம்" தான்.

Book

தினம் ஒரு புத்தகம் _____________________________ முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்..மூலமும் உரையும்.. (முனைவர் கமலா முருகன்) ______________________________        தேன் என இனிக்கும் சீர்மையானச் சொல்லழகும், பொருளழகும், இசை இனிமையும் கலந்து கற்போர் நெஞ்சை ஈர்த்து என்பையும் உருக்கும் இயல்புடையது இப்பிள்ளைத்தமிழ் பாடல்கள்.        மெய்ப்பொருள் கண்டு மகிழ விரும்புவோர் அனைவரும்,இந்நூல் உரையைப் படித்து சொக்கித்தான் போவார்கள்.        அனைவரும் படித்து பயனடையும் வகையில் அமைந்த நூல் இது.வாசிப்பவர்கள் எளிதாகப் பொருளைப் புரிந்து இலக்கியச் சுவையை பெறும் வகையில் ஆசிரியின் உரை மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. வாசியுங்கள்.இலக்கிய இன்பம் நுகருங்கள்.                  (விலை : ரூ 70)                  (சாரதா பதிப்பகம்)   

Identity

Image

Influence

Image

GK

"அமெரிக்காவின் பூங்கா நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? சிகாகோ  விளக்கம்: "அமெரிக்காவின் பூங்கா நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் "சிகாகோ" தான்.

Self control

Image

Book

தினம் ஒரு புத்தகம் _______________________________ பொங்கல் பரிசு (அறிஞர் அண்ணா) _______________________________        அண்ணா அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகி இருக்கிறது.        "பொங்கல் பரிசு "என்ற தலைப்பு கொண்ட இத்தொகுப்பில் 18 சிறுகதைகள் இடம்பெற்று இருக்கின்றன.சிறுகதை ஒவ்வொன்றும் சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதப் பட்டவை.        "தவளையும் மனிதனும் " போன்ற சிறுகதைகள் இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கின்றன.        அண்ணாவின் எளியநடை, பீத்தகத்தில் உள்ள அனைத்துக் கதைகளையும் ரசித்துப் படிக்க உதவுகிறது.               (விலை : ரூ110)               (அர்ஜித் பதிப்பகம்)

GK

"நூறு வாசல் நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் எது? தேப்ஸ்  விளக்கம்: "நூறு வாசல் நகரம்" என்ற சிறப்புப் பெயரைப் பெரும் நகரம் "தேப்ஸ்" நகரம் ஆகும். இது எகிப்தில் உள்ளது.