Book
தினம் ஒரு புத்தகம்
________________________________
அவளுக்கென்று ஒரு இடம்
(லட்சுமி)
_________________________________
ஜெய்குமார் தன் துணையை தேர்தெடுப்பதில் தவறு செய்கிறான்.தன் மனைவி குணம் சரியில்லாதவள் என்பதை அறியாது விபத்தில் இறந்து விட்டதாக நினைத்து கவலை அடைகிறான்.
அவள் இறக்கவில்லை, இருக்கிறாள் என்ற உண்மையையும், அவள் வாழ்வின் அவலத்தையும் அறிந்த தாத்தா சிவபாதம் அனுராதாவை பேரனுக்கு மறுதாரமாக மணமுடித்து வைக்கிறார்.
உண்மை நிலை அறிந்து வாணியை ஜெய்குமாருடன் வாழ வைக்க நினைக்கிறாள் அனுராதா.
ஆனால், மனம் திருந்திய வாணியும், மற்றவர்களும் தங்கள் வாழ்க்கையில் அவளுக்கென்று தாங்கள் அளித்த இடத்திலிருந்து அவளை விடுவிக்க மனமின்றி தவிக்கின்றனர்.
வாணி நோய் காரணமாக இறக்கிறாள்.அனு புதிதாகத் தனது வாழ்வைத் தொடங்குகிறாள்.
(விலை : ரூ 140)
(பூங்கொடி பதிப்பகம்)
Comments
Post a Comment