தினம் ஒரு புத்தகம் ______________________________ உரைகல் (தொ.பரமசிவம்) _______________________________ ஆசிரியர் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள், மதிப்பீடுகள், பேட்டிகள், அணிந்துரைகள், உரைகள் ஆகியவை இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன. அழகான நடையில் சிறிய சிறிய சொற்றொடர்களில் கருத்துகளைப் புரிந்து கொள்ளும்படி விளக்கி உள்ளார். பேரக் குழந்தைகள் குறித்த கட்டுரையில் பேரன், பேத்தி என்ற சொற்களின் பொருண்மைகள், நம்பிக்கை, சடங்குகள், கேலி செய்யும் உரிமை போன்றவற்றைச் சுவையாகச் சொல்வதோடு, நிகழ் காலத்தில் குழந்தைகள் தாத்தா, பாட்டிகளிடமிருந்து அந்நியப்பட்டு விட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். (விலை : ரூ 130) (கலப்பை பதிப்பகம்)