Book
தினம் ஒரு புத்தகம்
_______________________________
மண்ணகத்துப் பூந்துளிகள்
(ராஜம் கிருஷ்ணன்)
_______________________________
பெண் குழந்தைகளின் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட புதினம் இது.
தாய்பாலுண்டு தவழ்ந்து வளர வேண்டிய பெண் சிசுக்களை எருக்கம் பாலிட்டு குழியில் போடும் அவலம் சமுதாயத்தில் நடந்ததை இப்புதினம் இடித்துரைக்கும்.
பெண் குழந்தைகளை மிகவும் பொறுப்புடன் வளர்க்க வேண்டியதிருப்பதால், பால் வேறுபாடு காட்டி பெண் பிறவி தவிர்க்கப்பட்டது என்ற சமூக உண்மையை மறைமுகமாகச் சுட்டுகிறார் ஆசிரியர்.
இவரது படைப்புகள் அனைத்திலும் சமூக அக்கறையும், பெண் நிலைப் பார்வையும் இழையோட்டமாக இருக்கும்.
வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் புதினம்..
வாசியுங்கள்...
வாசிப்பை வாழ்க்கை ஆக்குங்கள்..
(தாகம் பதிப்பகம்)
Comments
Post a Comment