வேடிக்கை மனிதர்கள்
தினம் ஒரு புத்தகம்
___________________________
வேடிக்கை மனிதர்கள்
(வெ.இறையன்பு)
____________________________
ஆசிரியர் எதிர் கொண்ட அனுபவங்கள், கண்ணில் தென்பட்ட சில காட்சிகள் கூர்ந்து பார்த்து அவதானித்த சில சம்பவங்கள், மனதிற்குள் பூட்டி வைத்திருந்த சில நினைவுகள், கனவுகள் இவற்றை அனைத்தையும் சீராக வரிசைபடுத்தி முறையாக கோர்வை படுத்தி பொருத்தமான தலைப்பின்கீழ்,
நகைச்சுவையும் கலந்து மிகச் சிறப்பாக இந்தக் கட்டுரைகளை வடிவமைத்திருக்கிறார்.
இவரால் மட்டும் எப்படி இத்துணை வேடிக்கை மனிதர்களை சந்திக்க முடிகிறது என்று வியப்பு எழும்.
விரிகின்ற நூலின் பக்கங்களை மூடும் போது நமது விழிகளும் புருவங்களும் வியப்பால் விரிகின்றன.
(விலை : ரூ180 )
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment