Book
தினம் ஒரு புத்தகம்
______________________________
அன்பே ஆரமுதே
(தி.ஜானகிராமன்)
_______________________________
தி.ஜ வின் புதினங்களில் மிகவும் ஜனரஞ்சகமானது.கதையோட்டத்தில் நிகழும் நிகழ்வுகள் எதிர்பாரா சுவாரஸ்சியத்தைக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம்.
ஆன்மீக ஈடுபாடு முற்றிய அனந்தசாமி திருமண நாளன்று துறவு கொண்டு ஓடுகிறார்.சந்நியாசியாக அலைகிறார்.முப்பதாண்டுகளுக்குப் பின் அதே மணப் பெண்ணிடம் வந்து சேர்கிறார்.
இந்தக் காலஓட்டத்தில் நேரும் உளவியல் சிக்கல்களையும், உறவுப் பிணைப்புகளையும் சொல்கிறது இப்புதினம்.
இளமையில் விலகிப் போன இருவர் முதுமையில் தம்பதியராகவும், பெறாத பெண்ணுக்குப் பெற்றோராகவும் இருக்கும் அதிசயமே கதையின் மையம்.
(விலை : ரூ 150)
(ஐந்திணை பதிப்பகம்)
Comments
Post a Comment