GK
"லோக்நாயக்" என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர் யார்?
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
விளக்கம்:
ஜெயபிரகாஷ் நாராயண் (அக்டோபர் 11, 1902 - அக்டோபர் 8, 1979), பரவலாக JP என அறியப்பட்டவர், இந்திய விடுதலை இயக்கத்தில் பங்காற்றிய விடுதலை வீரர் மற்றும் 1970 களில் இந்திரா காந்தியை எதிர்த்து போராடிய அரசியல் தலைவர். தமது அமைதியான முழு புரட்சி (Total Revolution) என்ற முழக்கத்திற்காக பரவலாக அறியப்பட்ட சோசலிசவாதி. 1977ஆம் ஆண்டு உருவான ஜனதா கட்சி அரசுக்கு வித்திட்டவர்.1998 ஆம் ஆண்டு, அவரது மறைவிற்கு பிறகு, அவராற்றிய சமூகப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.1965ஆம் ஆண்டு தமது பொதுச்சேவைக்காக மக்சேசே பரிசு வழங்கப்பட்டது. இவர் "லோக்நாயக்" என்ற அடைமொழி கொண்ட சிறப்புப் பெயரையும் பெறுகிறார்.
Comments
Post a Comment