மூதுரை
மூதுரை
________________
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன்.
பொருள்
__________________
ஆழமான கடலின் நீரை அழுத்தும் படியாக அமிழ்த்தி அள்ளினாலும், ஒரு படி நீரானது நால் படி நீராகாது.
அதுபோல
தோழியே! பெண்களுக்கு மிக்க பொருளும் தக்க நாயகனும் கிடைத்தாலும் அவரவருடைய விதியின் பயனையே அடைவர்.
Comments
Post a Comment