மூதுரை
மூதுரை
______________________
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் ஆகார மானாற் போல்-பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மே லிட்ட கலம்.
பொருள்
________________________
வரிகளை உடைய வேங்கைப் புலியின் விடநோயை போக்கிய விட வைத்தியன், அப்பொழுதே அப்புலிக்கு இரையானாற் போல,
நன்றியில்லாத அற்ப அறிவினருக்கு செய்யப்பட்ட உதவி கல்லின் மேல் போடப்பட்ட மட்கலம் போல, செய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும் என்பதாகும்.
Comments
Post a Comment