மூதுரை
மூதுரை
_______________
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுளித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.
பொருள்
_________________
நீர் வற்றிய குளத்திலிருந்து நீங்குகின்ற நீர்வாழ்ப் பறவைகள் போல வறுமை வந்தபொழுது நீங்குவார் உறவினராகார்.
அந்தக் குளத்தில் உள்ள கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் போல, வறுமை வந்தபோதும் நம்மைவிட்டு நீங்காது உடனிருப்பவரே உறவினராவர்.
Comments
Post a Comment