மூதுரை
மூதுரை
___________________
அடக்க முடையர் அறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
பொருள்
____________________
கொக்கானது, நீர் மடையினிடத்து ஓடுகின்ற சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருக்க, பெரிய மீன் வரும் வரையும் அடங்கி இருக்கும்.
அதுபோல அடக்கத்துடன் இருப்பவரை அறிவில்லாதவர் என்று எண்ணி அவரை வெல்ல நினைக்க வேண்டியதில்லை..
Comments
Post a Comment