GK
நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்தியர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்
விளக்கம்:
நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை "ரவீந்திரநாத் தாகூர்" அவர்களைத் தான் சேரும். இரவீந்தரநாத் தாகூர் புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Comments
Post a Comment