Book - நிலமெனும் நல்லாள்
தினம் ஒரு புத்தகம்
____________________________
நிலமெனும் நல்லாள்
(இந்திரா பார்த்தசாரதி)
____________________________
சமூக சேவை சாமுவேல் ..பட்ட கடனுக்கு தன் மகளை ரவுடி நாணுவுக்கு மணமுடிக்க விரும்பும் சாமண்ணா ..சமூக அமைப்பை மாற்ற புரட்சியை பரிகாரமாகக் காணும் இளைஞன் ராஜீ..
வெத்துப் பேச்சும் வெற்றிலையுமாகக் காலம் தள்ளும் சிவகுரு..
புற்று நோய் தஞ்சம்மா..
நிர்மலா, தர்மு, சொர்ணம், பண்ணையார் ..
இப்படி பாத்திர அமைப்பு மூலமாகவே சுற்றுப்புற சூழ்நிலைகளை வர்ணனைகள் இல்லாமல் தஞ்சாவூர் கிராமத்தை நம் மனதில் ஆசிரியர் பதிய வைக்கிறார்.அதுதான் நூலின் வெற்றி..
பொருளாதார ஏற்றத்தாழ்வு, பண்பாடு, கலாச்சாரம் என்ற புற அமைப்புகளில் எதிர் நீச்சலடிக்கும் சில மனிதர்கள், சில மனங்கள், சில பொழுதுகள் இவற்றைத் தத்துவரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இப்புதினம்.
(விலை : ரூ 10, (1980ல்)
(தமிழ் புத்தகாலயம்)
Comments
Post a Comment