Book - துறைமுகம்

தினம் ஒரு புத்தகம்
______________________________
துறைமுகம்
(தோப்பில் முஹம்மது மீரான்)
_______________________________
        குமரி மாவட்டத்தில் துறைமுகத்தை ஒட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை.
       ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருத்திப் போவது இப்புதினத்தின் வெற்றி.
      குறிப்பாக காசிம் சுவரில் விழும் போது, அந்தச் சுவரில் படிந்திருக்கும் அவனின் வாப்பாவின் வாசத்தை உணர முற்படும் இடம் மனதை வலிக்கச் செய்கிறது.கதை முழுவதும் வலி சுமக்கும் பிம்பங்களை முன்னிறுத்தி நகர்த்துகிறார்.
        இந்நூலை வாசிக்கும் போது,  அம்மக்களின் வாழ்நிலை குறித்த பல விசயங்களை அறிந்து கொள்ள முடியும்.
         இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல் இது.
              (விலை : ரூ 190)
              ( அடையாளம் பதிப்பகம்) 
 

Comments

Popular posts from this blog

Book - வாழ்க்கை நலம்

கிராம_ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31வகையான பதிவேடுகள்