Book - ஈரம் கசிந்த நிலம்
தினம் ஒரு புத்தகம்
____________________________
ஈரம் கசிந்த நிலம்
(சி.ஆர்.ரவீந்திரன்)
_____________________________
கதையில் நிழலாய் இருக்கும் கதாப்பாத்திரம் நிலம் தான். நிலத்தின்மீது பற்று கொண்ட வேளாண்மையை மட்டும் முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த மக்களைக் கதைமாந்தர்களாகக் கொண்ட புதினம்.
அம்மணி தன் கல்யாணத்தைத் தள்ளிப் போடுகிறாள். காரணம் நிலத்தின்மீது வைத்த ஆசை.
வெடிக்காரர் அளவுக்கதிகமாக உள்ள நிலம் சும்மா பாழாகிறதே என்று, காளியப்பனுக்கு குத்தகைக்கு விடுகிறார்.பிரச்சனை வருகிறது.காளியப்பன், மாணிக்கத்தால் கொல்லப்படுகிறான்.
மணமணக்க கொங்கு வட்டார மக்களின் வாழ்வை அப்படியே அவர்கள் வட்டார மொழியில் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கும் வகையில் சுவைபட எழுதியுள்ளார் ஆசிரியர்.
பல விருதுகள் பெற்ற ஒரு "பண்பாட்டு ஆவணம் " இந்நூல்.
(விலை : ரூ 200)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment