Book - தொல்காப்பிய பூங்கா
தினம் ஒரு புத்தகம்
_______________________________
தொல்காப்பியப் பூங்கா
(கலைஞர் கருணாநிதி)
_______________________________
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள் பலர் இருந்தாலும், இன்றைய காலத்தில் பலரும் புரிந்து கொள்ளும்படி மிகவும் எளிய வகையில், பலாச்சுளை போன்ற கருத்துகளை அள்ளித் தந்தவர் கலைஞர் மட்டுமே.
இலக்கண வகையில், மரபு வழியில் மலைக்குன்று போல் இருந்த தொல்காப்பியத்தை, தன் எழுத்து உளியால் உடைத்து, அதில் கருத்தாழமிக்க குறிப்புகளைப் பயிரிட்டு பூங்காவாக மாற்றியவர் முத்தமிழ்அறிஞர் அவர்கள்.
இந்நூலின் நோக்கம் பற்றி அவர் கூறும்போது, "இலக்கணம் மட்டுமே கூறுவது என் நோக்கமில்லை என்றாலும், இலக்கணத்தில் முக்கியமான சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்வதற்கான முயற்சி " என்றார்.
மெய்யெழுத்துகள் எத்தனை என்று எவ்வாறு நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்கு கலைஞர் அவர்கள் சொல்லும் வரலாற்றுக் குறிப்பு மிகவும் வித்தியாசமானது.
பூங்காவினுள் வலம் வாருங்கள்...
இலக்கண மணம் நுகருங்கள்..
(விலை : ரூ 450)
(பூம்புகார் பதிப்பகம்)
Comments
Post a Comment