Book வால்காவிலிருந்து கங்கை வரை
தினம் ஒரு புத்தகம்
_____________________________
வால்காவிலிருந்து கங்கை வரை
(ராகுல் சாங்கிருத்யாயன்)
தமிழில் ..கண.முத்தையா
______________________________
இந்தியாவில் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்திய நாவல்.மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் இவைகளை 20 கதைகளாகப் படைத்துள்ளார் ராகுல்ஜி.
இவைகள் வெறும் கதைகள் அல்ல.மனித இன வரலாறு.
சரித்திரத்தைப் படிக்கும் சலிப்போ, தத்துவத்தைக் கற்கும் சிரமமோ இல்லாமல் வெகு இயல்பான, சுவையான நடையில் கூறப்பட்டுள்ள அறிவுப் பெட்டகம் இந்நூல்.
கதைமாந்தர் வழியாக தன் கருத்துகளை தர்க்கரீதியாக விளக்குகிறார் ஆசிரியர்.கி.மு 6000 ல் துவங்கும் முதல்கதை இருபதாவது கதையாக 1942 இல் முடிகிறது.
அனைவரும் படித்ததோடு மட்டுமல்லாமல் பாதுகாத்து வைத்து, போற்ற வேண்டிய செல்வம் இந்நூல்.
(விலை : ரூ 375)
(தமிழ்ப் புத்தகாலயம்)
Comments
Post a Comment