Book - நெஞ்சில் ஒரு முள்
தினம் ஒரு புத்தகம்
______________________________
நெஞ்சில் ஒரு முள்
(மு.வரதராசனார்)
_______________________________
அறியாமல் தவறு செய்துவிட்டு பின்னர் திருந்தி வாழும் முயற்சியில் ஈடுபட்ட நல்லவள் ஒருத்தியின் வாழ்வை விவரிக்கும் நூல்.
மு.வ வின் புதினங்களில் நீண்ட புதினம் இது எனலாம்.
கெட்டது எப்படியும் அழிந்துவிடும் என்பதை உணர்த்தும் புதினம்.
நல்ல உயிர்கள் அழிவது, மலர் மலர்ந்து மணம் கமழ்ந்த பிறகு வாடி உதிர்ந்து அழிவதைப் போன்றது.அதற்காக வருந்த வேண்டியதில்லை.
வாடி உதிர்ந்த மலர் அழுகி மறுபடியும் செடிக்கு உரமாகும்.அதுபோல் நல்லோர் வாழ்ந்து அழிவது, நன்மைகள் மறுபடியும் தழைப்பதற்கே .
இது போன்ற வாழ்வியல் கருத்துகள் பலவற்றை உள்ளடக்கியது. அரிய தகவல் பெட்டகம் இந்நூல்.
(விலை : ரூ 180)
(பாரி நிலையம்)
Comments
Post a Comment