Book அந்த வேப்ப மரங்கள்
தினம் ஒரு புத்தகம்
________________________________
அந்த வேப்பமரங்கள்
(நா.காமராசன்)
_________________________________
வேப்ப மரங்கள் முதிர்ந்து தம் நிலை சாய்ந்தாலும் பக்கத்தில் தோன்றும் கன்றுகள் செழித்து வளர்வதைக் காணலாம்.
வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளால் மக்கள் நிலைகுலைந்து போகாமல், உணர்ச்சி குன்றாமல் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்ற செய்தியை "அந்த வேப்பமரங்கள் " என்ற புதுக்கவிதைத் தொகுப்பு நமக்கு உணர்த்தும்.
கவிஞரின் கவிதைகள் கற்போரைக் களிப்படையச் செய்பவை.
காலத்திற்கும் அழியாதவை.
கம்ப்யூட்டர்
____________________
நான்
கணக்கின் தலைநகரம்
விஞ்ஞானக்
கனவுகளின் சாம்ராஜ்ஜியம்..
எனது ஜனனம்
மனிதனுக்குப் போட்டியல்ல - - -
மனிதன் எந்திரமாவதை விட
எந்திரம் மனிதனாவது மேலானதல்லவா?
தமிழர்களே!
உங்கள் மொழி பெயர்ப்பில்
என்னைத் தொலைத்து விடாதீர்..
(விலை : ரூ 40)
(சுதா பதிப்பகம்)
Comments
Post a Comment