Book - கொம்மை
தினம் ஒரு புத்தகம்
____________________________
கொம்மை
(பூமணி)
_____________________________
மகாபாரதம் என்னும் மாபெரும் காவியத்தில் இன்னும் உயிர்ப்புடன் உலவும் அபலைப் பெண்களின் அவலத்தை முன்வைத்து, மறுகுரலில் மக்கள் மொழியில் புனையப்பட்ட பெரும் புதினம்.
யமுனையில் படகோட்டிச் சேவை செய்த சத்தியவதி, ஆணாதிக்கத்தால் அலைகழிக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்த அம்பை, தன்னை செயற்கைக் குருடாக்கி, இயற்கைக் குருட்டுக் கணவனைக் கைபிடித்த காந்தாரி, விலைக்கு வாங்கப்பட்ட மாதுரி இன்னும் எத்தனையோ அபலைகள் பற்றி பேசும் நூல் இது.
600 பக்கங்களில் முழு மகாபாரதத்தையும், கதை மாந்தர்களின் மோதல்களையும், வீழ்ச்சியையும் அவருடைய கோணத்தில் மக்கள் மொழியில் உணர்ச்சிப் பூர்வமான காவியமாக படைத்திருக்கிறார் ஆசிரியர்.
(விலை :ரூ 555)
(டிஸ்கவரி புக் பேலஸ்)
Comments
Post a Comment