மூதுரை
மூதுரை
________________
ஆழ அமுக்கி முகப்பினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன்.
பொருள்
_______________
ஆழமாகிய கடலின் நீரை, அழுத்தும் படியாக அமிழ்த்தி அளந்தாலும் ஒரு படியானது, நான்கு படி நீரை முகவாது.அதுபோல தோழியே! பெண்களுக்கு, மிக்க பொருளும் தக்க நாயகனும் கிடைத்தாலும், அவரவருடைய ஊழ்வினையாகிய பயனே அனுபவிக்கப்படும் பயனாகும்..
Comments
Post a Comment