மூதுரை
மூதுரை
_____________________
நற்தா மரைக்கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூக்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
பொருள்
_______________________
குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை சேர்ந்தது போல கற்றவர்களை கற்றவர்களே விரும்பிச் சேர்வர்.சுடுகாட்டில் பிணத்தைக் காக்கை விரும்புவது போல கல்வி அறிவில்லா மூடரை மூடர்களே விரும்புவர்.
Comments
Post a Comment