மூதுரை
மூதுரை
________________
பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல்.
பொருள்
_________________
உமி நீக்கவதற்கு முன்னே முளைப்பது அரிசியேயாயினும், உமி நீங்கிப் போனால் முளையாது.அதுபோல பெரிய வல்லமை உடையவர்க்கும் துணைவலி இல்லாமல், எடுத்துக் கொண்ட செயலை செய்து முடித்தல் இயலாது.
Comments
Post a Comment