Book கொடி முல்லை
தினம் ஒரு புத்தகம்
______________________________
கொடிமுல்லை
(வாணிதாசன்)
______________________________
கொடிமுல்லை, கவிஞரின் இயற்கை ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.
இயற்கை அழகை வெளிப்படுத்தவும், செந்தமிழின் செழிப்பை உணர்த்தவுமே கொடிமுல்லை படைக்கப்பட்டது.
பகுத்தறிவுப் பார்வையோடு இக்காவியம் தொடங்குகிறது.உவமை, கற்பனை என்னும் உத்திகளை நயம்படக் கையாண்டுள்ளார் ஆசிரியர்.எளிதில் பொருள் புரியும்படியான வார்த்தைகள், வினாவிடை முயற்சிகள், நகைச்சுவையுடன் சாடுவது, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் போன்ற நடை அமைப்பினை இக்காவியத்தில் காணலாம்.
காப்பியத் தலைவி, காப்பியத் தலைவனைவிட கூர்ந்த அறிவுடையவராகவும், செயல்திறன் மிக்கவராகவும் படைத்திருப்பது பெண்களை முதன்மைப் படுத்துவதே கவிஞரின் விருப்பம் என்பது தெளிவாகத் தெரியும்.
(விலை : ரூ 30)
(சீதை பதிப்பகம்)
Comments
Post a Comment