Book சதுரங்க குதிரை
தினம் ஒரு புத்தகம்
______________________________
சதுரங்கக் குதிரை
(நாஞ்சில் நாடன்)
______________________________
திருமணம் ஆகாத, உறவுகளோடு ஒட்டாத, சொந்த ஊர்ப்பக்கம் ஒதுங்காத, தாய் தந்தை இழந்த நாராயணன் பரிதாபத்திற்கு உரியவன்.
கதை முழுக்க மும்பை, மற்றும் மகாராஷ்டிரா பக்கம் நடக்கிறது.பிளாஷ்பேக் நாகர்கோயில் பக்கம் வந்து போகிறது.
புதினம் முழுவதும் தனிமை, உறவுகள் தூரம் போகும் வெறுமை, விதவைகளை மறுமணம் செய்யவோ, விவாகரத்து செய்தப் பெண்களை மறுமணம் செய்யவோ மனம் வராத கொடுமை, அனுசரணையான அலுவலக சகாக்கள் என.. போகிறது கதை.
வாசிக்கும் போது புதினத்தின் காட்சிகள் கண்முன் விரிவடையும்.
நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல் இது.📕
(விலை : ரூ 120)
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment